சென்னை: சென்னை ராஜாஜி சாலையில் பதிவுத்துறைக்கு சொந்தமான 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடத்தை புனரமைக்கும் பணி பதிவுத்துறை சார்பில் தமிழக பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை பாரம்பரிய கட்டிடத்தை பாதுகாக்கும் கோட்டம் மூலம் இந்த கட்டிடங்களை புனரமைக்க திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி ைவக்கப்பட்டது. அதன்பேரில், இந்த கட்டிடத்தை புனரமைக்க ரூ.9.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக 2019-2020ம் நிதியாண்டிற்கு ரூ.1.94 கோடி நிதி விடுவிக்கப்பட்டது.