சென்னை: தஞ்சாவூர், ஒரத்தநாட்டை சேர்ந்தவர் சண்முகப்பிரியா (33). இவருக்கும், தாம்பரம் பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வரும் விவேக் என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் நுங்கம்பாக்கம் குமரப்பா தெருவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் விவேக் பணிக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்த விவேக் கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது,