பூந்தமல்லி: திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்காக நேற்று மாலை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் பெரியார் தெருவைச் சேர்ந்த பாலா (37), பிரதீப், கார்த்தி, ஜெகன் உள்ளிட்ட 4 பேர் வரவழைக்கப்பட்டனர். சுமார் 15 அடி ஆழம் கொண்ட கழிவு நீர் தொட்டியில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து கழிவுநீர் தொட்டியின் அடிப்பகுதியில் உள்ள சகதிகளை அகற்றுவதற்காக 4 பேரும் அந்த தொட்டிக்குள் இறங்கினர். முதலில் பாலா இறங்கி அடியில் உள்ள சகதிகளை கிளறும்போது விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். இதனை கண்டதும் மற்ற மூன்று பேரும் அவசரகதியில் மேலே வந்து விட்டனர்.