சென்னை: பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் பிரிவில் வரும் 12ம் தேதி இரவு 12.05 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், மூர்மார்க்கெட்டில் இருந்து 11ம் தேதி இரவு 11.55 மணிக்கு திருவள்ளூர் நோக்கி புறப்படும் ரயில், கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயல், அண்ணனூர், இந்து கல்லூரி, பட்டாபிராம் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.