சென்னை: “நெய்வேலியில் பாஜ நடத்திய போராட்டம் நடிகர் விஜய்க்கு எதிரானது அல்ல” என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சிஏஏவுக்கு எதிராக மதத்தலைவர்கள் களத்தில் இறங்குகிறார்கள். கிறிஸ்தவ மத தலைவர்களும் இறங்குகிறார்கள். சிஏஏ குறித்து எந்த விவாதம் எங்கு நடந்தாலும் அதில் கலந்துகொண்டு விளக்கம் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நெய்வேலியில் பாஜ நடத்திய போராட்டம் நடிகர் விஜய்க்கு எதிரானது அல்ல. பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால்தான் போராட்டம் நடத்தப்பட்டது.