சென்னை: மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: விழுப்புரம் மாவட்டம், டி. நல்லாளம் கிராமத்தை சேர்ந்த ஜெயசெல்வி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தென்காசி மாவட்டம், களப்பாகுளம் கிராமத்தை சேர்ந்த முருகன் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம், சித்தரரேவு கிராமத்தை சேர்ந்த காட்டுராணி அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம், கூத்தூர் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி விவசாய நிலத்தில், மின்மோட்டாரை இயக்க முற்பட்ட போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ராணிப்பேட்டை மாவட்டம், தருமநீதி கிராமத்தை சேர்ந்த நடராஜன் மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம், திருநந்திபுரம் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி விவசாய நிலத்தில், மின்மோட்டாரை இயக்க முற்பட்டபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சேலம் மாவட்டம், காட்டுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த குமார் மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, கீழே விழுந்து உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம், தேவாலா கிராமத்தை சேர்ந்த ஹரிஹரன் விளையாடி கொண்டிருந்தபோது, மின் கம்பி பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.