நகை கடையில் ரூ.45 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கையாடல் செய்ததாக கிளை மேலாளர் மீது போலீஸில் புகார்

சென்னை: தாம்பரத்தில் ஜி.ஆர்.டி நகை கடையில் ரூ.45 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கையாடல் செய்ததாக கிளை மேலாளர் மீது போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகை கடை உதவி மேலாளர் பார்த்திபன், ஊழியர்கள் வெங்கடேஷ், நம்மாழ்வார் உள்ளிட்டோர் மீது தாம்பரம் போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது. நகைக்கடையில் கணக்கு தணிக்கையின்போது ரூ.45 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள் கையாடல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: