ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் அமைக்கிறது கடலூரில் 50,000 கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை: முதல்வருடன் ஆலோசனை

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்தாண்டு அமெரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு கொள்கை ரீதியான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ₹50 ஆயிரம் கோடி முதலீட்டில் கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை நிறுவுவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி தலைமையில் நேற்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் புரனேந்து சாட்டர்ஜி மற்றும் நிர்வாக துணை தலைவர் ராபின் முகோபத்யாய் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Related Stories: