பூந்தமல்லி: போரூரில் 50 லட்சம் மோசடி செய்ததாக சாப்ட்வேர் நிறுவனம் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போரூர், ராஜகோபால் நகர், கவுரி அம்மன் தெருவை சேர்ந்தவர் கிரன் குமார் (44). இவர் நேற்று போரூர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தான் வெளிநாட்டில் இருக்கும்போது ராஜேஷ், ரக்சன், ரோமி ஆகிய மூன்று பேர், சாப்ட்வேர் நிறுவனம் நடத்துவதற்கு, எனது கட்டிடத்தை வாடகைக்கு கேட்டனர். இதையடுத்து 37 லேப்டாப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் சேர்த்து கட்டிடத்தை வாடகைக்கு கொடுத்தேன். ஆனால் இதுவரை வாடகை பணம் ஏதும் கொடுக்கவில்லை. தற்போது தன்னிடம் கூறாமல் எனக்கு சொந்தமான 16 லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு அலுவலகத்தை காலி செய்து விட்டு சென்று விட்டனர்.