மாநில டேபிள் டென்னிஸ் போட்டி: பட்டிவீரன்பட்டி மாணவர்கள் சாதனை

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி என்எஸ்விவி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தருண்விஜய், தருண்ராஜன் ஆகியோர் மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் 14வயதிற்குட்பட்டோருக்கான குடியரசு தினவிழா விளையாட்டு போட்டி நேற்றுமுன் தினம் நடந்தது. மாநில அளவில் நடந்த இப்போட்டியில் 32 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.

இரட்டையர் டேபிள்டென்னிஸ் போட்டியில் திண்டுக்கல் அணி சார்பில் பங்கேற்ற பட்டிவீரன்பட்டி என்எஸ்விவி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தருண்விஜய், தருண்ராஜன் ஆகியோர் இறுதி போட்டியில் மதுரை அணியை வென்று முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர்.

மாணவர் தருண்விஜய் மார்ச் மாதம் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஆசிய அளவில் நடைபெற உள்ள ஆசியாபசிபிக் பெடரேசன் 2020 கோப்பைகான டேபிள்டென்னிஸ் போட்டியில் விளையாட தேர்வாகியுள்ளார். மாநில அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்களை இந்துநாடார்கள் உறவின்முறை சங்க தலைவர் ராஜாராம், செயலர் சங்கரலிங்கம், பள்ளி தலைவர் கருணாகரன், செயலர் பிரசன்னா, பள்ளி முதல்வர் ஆத்தியப்பன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

Related Stories: