கரூர்: பேஸ்புக்கில் காதலித்து 4 அடி உயரம் கொண்ட வாலிபரை பார்மசி படித்த பெண் திருமணம் செய்து கொண்டார். பின்னர் பாதுகாப்பு கேட்டு கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திருமண ஜோடி தஞ்சமடைந்தது. கரூர் அருகே உள்ள தெரூரை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (25). 4 அடி உயரமுள்ள இவர் பிஎஸ்சி, ஐடி படித்து விட்டு ஆன்லைனில் வேலை செய்து வருகிறார். இவருக்கு பேஸ்புக்கில் சிவகங்கையை சேர்ந்த பார்மசி படித்துள்ள பவித்ரா என்ற பெண் பழக்கமானார்.