சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானைகள் புத்துணர்வு முகாம் நேற்று நடந்தது. இதில், ஏராளமான பார்வையாளர்கள் பங்கேற்று கண்டுகளித்து வருகின்றனர். கோடை காலத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வனத்துறை சார்பில், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நேற்று முதல் தொடங்கியது. பூங்கா வனச்சரக அலுவலர் கோபக்குமார் தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் சகினா இசபல், பூங்கா மருத்துவர் ஸ்ரீதர், பயிற்றுனர் சங்கரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பூங்கா துணை இயக்குநர் கலந்துகொண்டு, புத்துணர்வு முகாமை தொடங்கி வைத்தார்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானைகள் புத்துணர்வு முகாம்: பார்வையாளர்கள் கண்டுகளிப்பு
- யானைகள் புத்துணர்ச்சி முகாம்
- பார்வையாளர்கள்
- வந்தலூர் உயிரியல் பூங்கா
- வந்தலூர் உயிரியல் பூங்கா யானைகள் புத்துணர்ச்சி முகாம்: பார்வையாளர்கள் பார்க்கிறார்கள்