சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் முன்ஜாமின் கேட்டு தலைமை செயலக ஊழியர் கவிதா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதுவரை 14 பேரை கைதுசெய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தலைமை செயலக ஊழியர் கவிதா தன்னை கைதுசெய்யக்கூடுமென கருதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ராமேஸ்வரத்தில் தனியார் துறையில் குரூப்-2ஏ தேர்வு எழுதியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடன் தேர்வெழுதிய விக்னேஷ், சுதா ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அதேபோல, தன்னையும் கைது செய்யக்கூடுமென அவர் தனது மனுவில் அச்சம் தெரிவித்துள்ளார்.