தேன்கனிக்கோட்டை அருகே யானை மிதித்து பெண் பலி

தேன்கனிக்கோட்டை: கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வந்துள்ள 100 யானைகள், கடந்த 3 மாதமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, தேன்கனிக்கோட்டையில் முகாமிட்டுள்ளன. நேற்று தேன்கனிக்கோட்டை அருகே மரகட்டா கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவி சரஸ்வதி(40), முனீஸ்வரன் கோயிலுக்கு நொகனூர் காட்டு வழியாக சென்றுள்ளார். அப்போது, தண்ணீர் குடிக்க வந்த ஒற்றை யானை, சரஸ்வதியை தும்பிக்கையால் தூக்கி வீசி மிதித்து கொன்றது. இதுகுறித்து தகவலறிந்த வனச்சரகர்கள் மற்றும் போலீசார், விரைந்து சென்று சரஸ்வதியின் சடலத்தை மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: