சென்னை : உள்ளாட்சி துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மாற்றியமைக்க குழு அமைத்து தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு 1948ம் இயற்றிய குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின்படி பல்வேறு தொழில்களுக்கு காலத்திற்கு ஏற்ற வகையில் குறைந்தபட்ச ஊதியம் மாற்றியமைக்கப்படுகிறது. தமிழகத்தில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறைந்த ஊதியம் மறு நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மறு நிர்ணயம் செய்வது தொடர்பான குழுவை அமைத்து தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக தொழிலாளர் துறை இணை ஆணையர், தலைவராகவும், 3வது செயலாக்க பிரிவு உதவி ஆணையர் செயலாளராகவும், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை உதவி இயக்குநர் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்ணா தொழிற்சங்க பேரவையைத் சேர்ந்த ராசு, இந்திய தொழிற்சங்க மையத்தைச் சேர்ந்த கே.ஆர்.கணேசன், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசை சேர்ந்த ஜெயசந்திரன் ஆகியோர் தொழிலார்களின் பிரநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் தனலட்சுமி, ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் ராஜ, சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை துணை ஆணையர் மதுசுதன் ரெட்டி ஆகியோர் வேலையளிப்பவர்களின் தரப்பு பிரநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.