தண்டையார்பேட்டை: மந்தவெளியில் இருந்து மாநகர பேருந்து (தடம் எண்.21) ேநற்று பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்தது. ஓட்டுனர் கீர்த்திவாசன் (40) என்பவர் பேருந்தை ஓட்டினார். சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பேருந்து சென்றபோது, அங்கிருந்த கல்லூரி மாணவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. சரமாரியாக மோதிக்கொண்ட அவர்கள், திடீரென அவ்வழியே வந்து இந்த மாநகர பேருந்து கண்ணாடியை அடித்து உடைத்தனர். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். இதையடுத்து, மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.