துரைப்பாக்கம்: திருவான்மியூர் தெற்கு அவென்யூவை சேர்ந்தவர் தர் (50). தனியார் கம்பெனி ஊழியர். இவர் கடந்த 27ம் தேதி வேலைக்கு சென்று விட்டு இரவு 11 மணியளவில் பஸ்சில் திருவான்மியூருக்கு திரும்பினார். பின்னர், செல்போன் பேசியபடி வீட்டுக்கு நடந்து சென்றார். அந்த நேரத்தில் அவ்வழியாக பைக்கில் வந்த 3 பேர், திடீரென தரின் செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பினர்.இதுகுறித்து திருவான்மியூர் போலீசில் தர் புகார் செய்தார். அடையாறு துணை கமிஷனர் பகலவன் உத்தரவின் பேரில், திருவான்மியூர் உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் அன்புகரசன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.