சென்னை: சிறந்த கலைஞர் விருது-2020 தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மெட்ரோ ரயில்நிலையங்களிலும் பயணிகள் வாக்களிக்க 20 ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளது. சென்னை, மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை கலைப்பள்ளியுடன் இணைந்து நடத்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நேற்று காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை சென்ட்ரல் மெட்ரோ, எழும்பூர் மெட்ரோ, ஷெனாய் நகர் உள்பட 15 மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெற்றது.
மெட்ரோ ரயில், மெட்ரோ ரயில்நிலையம் அல்லது மெய்நிகர் உண்மை என்கின்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. 15 மெட்ரோ நிலையங்களிலும் பங்கேற்ற மொத்தம் 1100 பங்கேற்பாளர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.