மீனவர் மாயம்

தண்டையார்பேட்டை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சதீஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க கடந்த 1ம் தேதி தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்த ராஜ் (39), விஜய் (38), சுரேஷ் (30), வேலு (27),  தண்டையார்பேட்டை வஉசி நகரை சேர்ந்த ஏழுமலை (38), கவுதம் (19) ஆகிய 6 பேர் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் 38 மைல் தொலைவில் மீன்பிடித்துககொண்டிருந்தபோது விசை படகு  டிரைவர் தேடியும் வேலுவை வெகுநேரமாகியும்  காணவில்லை. அனைவரும் நேற்று கரைக்கு வந்து  காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசில் புகாரளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மீன் பிடிக்கும்போது வேலு தவறி விழுந்தாரா? எப்படி மாயமானார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: