சென்னை: ஹோண்டா நிறுவனம் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட டூவீலர்களை ஏற்றுமதி செய்து புதிய சாதனை படைத்துள்ளது.ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம், தனது முதல் மாடலான ஆக்டிவாவுடன் 2001ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியை தொடங்கியது. கடந்த 2015ல் ஒட்டுமொத்த ஏற்றுமதி 10 லட்சத்தை தாண்டியது. பல ஆண்டுகளாக விரைவான தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்த நிறுவனத்துக்கு ஜப்பானில் உள்ள ஹோண்டா மோட்டார்ஸ் கூடுதல் ஏற்றுமதி ஒதுக்கீடு வழங்கியது.
இந்த நிறுவனம் அடுத்த 15 லட்சம் யூனிட் எண்ணிக்கையை 5 ஆண்டுகளிலேயே எட்டி சாதனை படைத்திருக்கிறது. இது, அதன் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் முந்தைய வேகத்தை விட 2 மடங்கு அதிகமாகும்.இதுகுறித்து ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவன விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு மூத்த துணைத் தலைவர் யத்வீந்தர் சிங் குலேரியா கூறுகையில், “ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை, ஹோண்டா நிறுவனம், ஏற்றுமதி மூலம் 25 லட்சம் இருசக்கர வாகன வாடிக்கையாளர்களை மகிழ்வித்துள்ளது.