சென்னை: வ.உ.சிதம்பரனார் செக்கிழுக்க உத்தரவு பிறப்பித்த குதிரை வண்டி கோர்ட் உட்பட 4 பாரம்பரிய கட்டிடங்களை புனரமைக்க ₹20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த கட்டிடங்கள் உள்ளன. இந்த பாரம்பரிய கட்டிடங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் அவை சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில், நூற்றாண்டு பழமையான அந்த கட்டிடங்களை பழமை மாறாமல் புனரமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தமிழக பொதுப்பணித்துறையில் பாரம்பரிய கட்டிட பாதுகாப்பு கோட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கோவை கவர்னர் பங்களா, குதிரை வண்டி கோர்ட், வடசென்னை சார்பதிவாளர், மின்ட் அரசு அச்சகம், புதுக்கோட்டை நீதிமன்றம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பாரம்பரிய கட்டிடங்களை பழமை மாறாமல் புனரமைக்கும் வகையில் இந்த கோட்டம் சார்பில் அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வ.உ.சிதம்பரனார் செக்கிழுக்க உத்தரவு பிறப்பித்த குதிரை வண்டி கோர்ட் உட்பட 4 பாரம்பரிய நீதிமன்ற கட்டிடம் புனரமைக்க ரூ.20 கோடி: தமிழக அரசு உத்தரவு
- நீதிமன்றம்
- 4 பாரம்பரிய நீதிமன்றங்கள் கட்டிடம்
- குதிரை-வண்டி நீதிமன்றம்
- வி.எஸ்.சிதம்பரனார்
- குதிரை-வண்டி நீதிமன்றங்களின் நீதிமன்றம்
- மறுவாழ்வுக்கான 4 பாரம்பரிய நீதிமன்றங்களை உருவாக்குதல்