சென்னை: அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், கடந்த 2018 ஜூன் மாதம், 11 வயது சிறுமியை அதே குடியிருப்பில் வேலை செய்து வந்த வாட்டர் மேன், லிப்ட் ஆபரேட்டர், வாட்ச் மேன் உள்ளிட்டேர் பல மாதங்களாக பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ், 17 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, போலீசார் 17 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது. அப்போது அனைவரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும், தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் மறுப்பு தெரிவித்தனர்.