கீழ்வேளூர்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த கீழையூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (59). இவர் தலைமையில் 43க்கும் மேற்பட்டோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவதாக கடந்த ஜனவரி 25ம் தேதி இணைப்பு நிகழ்ச்சி கீழையூரில் நடைபெற்றது. அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் முன்னிலையில் 25 நபர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். 43 பேர் கட்சியில் இணைவதாக நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டு கட்சியில் இணையாதவர்கள் பெயர்களையும் ஏன் நோட்டீஸ்சில் பெயர் போட்டீர்கள் என்ற பிரச்சனை அன்று முதல் இருந்து வந்துள்ளது.