கரூர்: குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்த உபி வாலிபரை கரூர் போலீசார் கைது செய்தனர். குழந்தைகளின் ஆபாசபடங்களை பார்ப்பதும், அவற்றை பதிவிறக்கம் செய்வதும், பிறருடன் பகிர்ந்து கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 12ம் தேதி திருச்சி பாலக்கரையை சேர்ந்த ஏசி மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் (42) என்பவர் தமிழ்நாட்டில் முதன் முதலாக கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கரூரில் வடமாநில வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்தவர் நியாஸ்அலி (23). கரூர் கோவை ரோட்டில் உள்ள ஒரு சலூன் கடையில் வேலை செய்து வந்தார்.