சென்னை: குடியுரிமை திருத்த சட்டம் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் நிலையில் சென்னையில் பிறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டம் அமலான நிலையில், சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதே நேரத்தில் இச்சட்டம் இந்தியர்களை பாதிக்காது என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பிறப்பு சான்றிதழ் கோரி மனு அளிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சான்றிதழ்களை விண்ணப்பித்து வருவதாக இஸ்லாமியர்கள் கூறுகின்றனர்.