வாலாஜாவில் மர்மபொருள் வெடித்து வாலிபர் படுகாயம்

வாலாஜா:  ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(32), எலக்ட்ரீஷியன். இவரது வீட்டில் கொசுத்தொல்லை அதிகமாக இருந்தது. இதனால்  இவர் நேற்றுமுன்தினம் மாலை வீட்டின் அருகே இருந்த குப்பைகளை ஒன்று சேர்த்து தீவைத்து கொளுத்தினார். குப்பை பற்றி எரிந்த நியைில் திடீரென அதிலிருந்த மர்ம பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. வெங்கடேசன் தூக்கிவீசப்பட்டு படுகாயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். தகவலறிந்து வாலாஜா போலீசார் சென்று குப்பையில் வெடித்த மர்ம பொருளை மீட்டு சோதனைக்கு  அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: