நடிகர் ரஜினிக்கு எதிராக 2014ல் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றது வருமானவரித்துறை

சென்னை: நடிகர் ரஜினிக்கு எதிராக 2014ல் தொடரப்பட்ட வழக்கை வருமானவரித்துறை வாபஸ் பெற்றது. வழக்கை திரும்ப பெற அனுமதித்து வருமானவரித்துறை மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2002 - 2005 வரை வருமானவரியை முறையாக செலுத்தவில்லை என ரூ.66.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் விதித்து வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீசை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது. மேல்முறையீட்டு தீர்ப்பாயம் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை வழக்கு தொடர்ந்தது.

Related Stories: