சென்னை: சிறைத்தண்டனையை ரத்து செய்வதற்கான கருணை மனு மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பேரறிவாளன் கடிதம் எழுதியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக பேரறிவாளன் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். சட்டப்பிரிவு 161ன் கீழ் கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி, தாம் கருணை மனு அளித்ததாகவும் தற்போது ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பேரறிவாளன் குறிப்பிட்டுள்ளார். தனது கருணை மனு மீது நடவடிக்கை எடுக்க 2018ம் ஆண்டு செப்டம்பரில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 7 பேரை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியதையும் பேரறிவாளன் குறிப்பிட்டுள்ளார்.