சேலம்: சேலத்தில் தடையை மீறி ராமர், சீதை படத்துடன் ஊர்வலம் சென்ற பாஜகவினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர். சேலத்தில் திராவிடர் கழகம் சார்பில், கடந்த 1971ம் ஆண்டு தந்தை பெரியார் நடத்திய மூடநம்பிக்கை எதிர்ப்பு ஊர்வலத்தில், இந்து கடவுள்கள் அவமரியாதை செய்யப்பட்டதாக, நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினியின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சேலம் மாவட்ட பாஜ சார்பில், 50 ஆண்டுக்கு பின் அதே நாளான ஜன.24ம் தேதி, ராமர், சீதா படத்துக்கு மாலை சூடி, மேள தாளத்துடன் ஊர்வலம் நடத்தி, அவமரியாதையை போக்குவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று காலை 10 மணிக்கு, சேலம் செவ்வாய்பேட்டை முக்கோணம் சித்தி விநாயகர் கோயில் முன் பாஜகவினரும், இந்து முன்னணியினரும் திரண்டனர்.