சென்னை: உச்சநீதிமன்றத்தின் புதிய உத்தரவை மேற்க்கோள் காட்டி சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு ஆளுநரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என முதலமைச்சரை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றமே தலையிட்டிருப்பதால் ஆக்கபூர்வமான விளைவை ஏற்படுத்தும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறினார். தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது 15 மாதங்களுக்கும் மேலாக ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் இருப்பது அரசிய சட்டத்திற்கு விரோதமானது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.