இடைப்பாடி: இடைப்பாடி அருகே, பவர்கிரிட் நிறுவனம் கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால், உயர்மின்கோபுரம் மீது ஏறி விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து கரூர் வரை, பவர்கிரிட் நிறுவனம் சார்பில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது, சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் ஒன்றியம், புதுப்பாளையம் வழியாக இப்பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், கொங்கணாபுரம் அருகே பெரியமுத்தம்பட்டி பகுதியில், விவசாயி ஆனந்தன்(60) என்பவருக்கு சொந்தமான நிலத்தில், உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டது. இதற்கு அதிகாரிகள் உரிய இழப்பீட்டை வழங்கவில்லை என அவர் புகார் தெரிவித்து வந்தார்.