தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி முதல் சுமார் 4 மணி நேரத்துக்கு மின்தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். ஆர்.கே.நகர் மின்வாரிய அலுவலகத்துக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை கருணாநிதி நகர், துர்காதேவி நகர், நேதாஜி நகர், சிவாஜி நகர், அஜிஸ் நகர், சேணியம்மன் கோயில் தெரு, வஉசி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென மின்தடை ஏற்பட்டது. தண்டையார்பேட்டை பவர்ஹவுஸ் மின்வாரிய அலுவலகத்தில் மின்பகிர்ந்தளிக்கும் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.