சென்னை: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் இலவச நீட் பயற்சி வகுப்புகள் நிறுத்திக்கொள்ளப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நெருங்கிவிட்டதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. அதனை கருத்தில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடந்த 2017 - 2018ம் கல்வி ஆண்டு முதல் இலவச நீட் பயற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இலவச நீட் பயற்சி வகுப்புகளில் பயின்ற மாணவர்களில் கடந்த 2017 - 2018ம் கல்வி ஆண்டில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை.
பொதுத்தேர்வு நெருங்கிவிட்டதால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தம்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
- அரசாங்க பள்ளி மாணவர்கள்
- பொதுத் தேர்தல்
- மூடு: பள்ளி கல்வித் துறை அரசுப் பள்ளியை அறிவிக்கிறது
- பள்ளி கல்வித் துறை அறிவிக்கிறது