2 முதியவர்கள் தூக்கிட்டு தற்கொலை

வேளச்சேரி: பள்ளிக்கரணை, அன்னை இந்திராநகர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (53). கொத்தனார். நேற்று முன்தினம் இரவு ராமமூர்த்தி திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அதேபோல், மயிலாப்பூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் எழுமலை (75). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் வேலை முடிந்து குடிபோதையில் வீட்டிற்கு வந்த ஏழுமலை மனைவியிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். மனைவி பணம் கொடுக்காமல் திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: