சென்னை: ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாள் விழாவை மிக சிறப்பாக, எழுச்சியாக கொண்டாட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார். ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து நேற்று காலை 9.30 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. வருவாய் துறை அமைச்சரும் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அனைத்து அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், ஜெயலலிதா பேரவையின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை (பிப்ரவரி 24ம் தேதி) எழுச்சியோடும், சிறப்போடும் கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி.