சென்னை : சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் 853 இடங்களில் மாநகராட்சி சார்பில் பொது கழிவறைகள் உள்ளன. இதில் 6641 இருக்கைகள் உள்ளன. இதில் பெரும்பலான கழிவறைகள் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் பொது கழிவறைகளை தனியாரிடம் கொடுப்பது என்று கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது. பல்வேறு காரணங்களுக்கான இந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்த கழிவறைகள் சிஆர்எஸ் நிதி மூலம் சீரமைக்க வருமாறு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதற்காக பல்வேறு விதிமுறைகளையும் மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது : தனியார் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளில் தங்களின் சமூக ெபாறுப்பு நிதியின் கீழ் கழிவறைகளை சீரமைக்கலாம். நிறுவனங்கள் தேர்வு செய்யும் கழிவறைகளை அவர்களே பராமரிக்க வேண்டும். இதன்படி கழிவறையானது அனைத்து நாட்களும் திறந்து இருக்க வேண்டும். அதற்கான பணியாளர்களே அந்த நிறுவனங்களே நியமிக்க வேண்டும். அவர்களுக்கு சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும். குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த கூடாது. பெண்கள் கழிவறையில் பெண்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும்.