சென்னை: குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று மாநில அரசுகள் கூறுவது சட்டத்திற்கு புறம்பானது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெறுகிறது. கேரளா மற்று பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த சட்டத்தை எதிர்த்து மாநில சட்டமன்ற தீர்மானத்தில் நிறைவேற்றியுள்ளன. இந்நிலையில் மத்திய அரசின் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று கூறுவது சட்டத்திற்கு புறம்பானது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை சிட்டிசன்ஸ் அமைப்பு மற்றும் நியூ இந்தியா அமைப்பு சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. அதில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தராமன் பேசியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 370 ன் படி பாகிஸ்தானில் இருந்து வந்து முகாமில் தங்கியிருந்தவர்கள் லோக்சபா தேர்தலில் மட்டும் வாக்களிக்க முடியும். தற்போது இந்த சட்டம் நீக்கப்பட்டதால் சட்டசபை தேர்தலில் வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் என்பது, குடியுரிமை வழங்குவதற்கு மட்டுமே தவிர, குடியுரிமையை பிடுங்குவதற்காக அல்ல.