சென்னை: லாரி மோதி உயிரிழந்த இன்ஜினியரின் தந்தைக்கு ரூ.86 லட்சம் இழப்பீடு வழங்குமாறு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அம்பத்தூரை சேர்ந்தவர் விஜயராகவன் (32). இன்ஜினியராக பணியாற்றி வந்த இவர், கடந்த 2012ல் மேடவாக்கம் - பெரும்பாக்கம் சாலையில், பைக்கில் சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி விஜயராகவனின் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் பலியானார். இதையடுத்து, தனது மகனின் இறப்பிற்கு இழப்பீடு வழங்க கோரி விஜயராகவனின் தந்தை ஜெயராமன் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.