டெல்டா பாசன நீர்திறப்பு 8,000 கனஅடியாக குறைப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு 8,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. காவிரி  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையில்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து  அவ்வப்போது குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளது. நேற்று முன்தினம், விநாடிக்கு 843 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 832 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர் திறப்பு, நேற்று காலை 8,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. மேலும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கான நீர்திறப்பும் நேற்று காலை நிறுத்தப்பட்டது.

Related Stories: