சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேற்று சேலம் சென்றார். தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் இன்று தனது உறவினர்களோடு பொங்கல் விழாவை கொண்டாடினார். குலதெய்வ கோயிலுக்கு சென்று குடும்பத்தினருடன் சிறப்பு வழிபாடு நடத்திய அவர், அங்கு பொங்கல் வைத்தார். இதில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உறியடி நிகழ்ச்சியிலும் உற்சாகமாக பங்கேற்றார்.