மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகள் முட்டியதில் 43 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் இதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு, டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்படும்.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் முட்டியதில் 43 பேர் காயம்
- காளை விபத்து
- போட்டி
- மதுரை அவனியபுரம் ஜல்லிக்கட்டு
- காளை விபத்தின் போது மதுரை அவனியபுரம் ஜல்லிக்கட்டு போட்டி