அணைக்கட்டு: ஊசூர் எருதுவிடும் விழாவில் பங்கேற்கும் மாடுகளுக்கு சான்றிதழ் வழங்க அரசு மருத்துவர் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையை தொடர்ந்து நடக்கும் எருதுவிடும் விழாவில் பங்கேற்கும் மாடுகளை ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவித்திருந்தார். உரிமையாளர் மாட்டுடன் நின்றபடி எடுத்த புகைப்படம், கால்நடை மருத்துவரின் சான்றிதழ், இன்சூரன்ஸ் வைத்தால் மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்யும் நிலை உள்ளது. இந்நிலையில் ஊசூர் பகுதியில் ஒரே ஒரு கால்நடை மருத்துவர் மட்டும் உள்ளதால் நீண்ட நேரம் காத்திருந்து மாடுகளுக்கு சான்றிதழ் பெற்று செல்கின்றனர். இதுவரை 50க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு ஊசூர் அரசு கால்நடை மருத்துவர் சான்றிதழ் வழங்கியுள்ளார்.