சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு சந்தித்து, 2.1.2020 அன்று கர்நாடக மாநிலம், தும்கூரில் நடந்த விழாவில், 2017-18ம் ஆண்டில், தமிழ்நாடு எண்ணெய் வித்துகளில் 10.382 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி அடைந்ததற்காக மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதுக்கு தமிழ்நாடு 5வது முறையாக தேர்வு செய்யப்பட்டு, பிரதமரால் வழங்கப்பட்ட கிருஷி கர்மான் விருதை காண்பித்து வாழ்த்து பெற்றார். விருதுடன், 2 கோடி ரூபாய் ரொக்க பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.