சென்னை: திருமணமான பெண் இறந்தால் அவரது தாய் சட்டப்பூர்வ வாரிசாக முடியாது. வாரிசுரிமை சட்டப்படி ஆண் இறந்துவிட்டால் மனைவி, குழந்தை மட்டுமின்றி தாயும் சட்டப்பூர்வ வாரிசுகள் தான். மணமான பெண் இறக்கும்போது அவரது தாயாரை வாரிசாக கருத முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜயநாகலட்சுமி என்பவரின் வாரிசு சான்றிதழில் தாய் ஷேகரியின் பெயரும் இருந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது.