திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து காலம் பதில் சொல்லும்: திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு

சென்னை: திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து காலம் பதில் சொல்லும் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். திமுக - காங்கிரஸ் கூட்டணி பிரச்சனை சரியாகிவிட்டதா என்ற கேள்விக்கு டி.ஆர்.பாலு இவ்வாறு கருத்து தெரிவித்தார். கூட்டணி தர்மத்தை திமுக மீறிவிட்டதாக கே.எஸ்.அழகிரி கூறியதால் திமுக நிர்வாகிகளுக்கு வருத்தம் எனவும் அவர் குறிப்பிட்டார். கே.எஸ்.அழகிரியின் அறிக்கையால் தான், சோனியா காந்தி கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Related Stories: