தமிழகம் செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா Jan 14, 2020 சமத்துவம் பொங்கல் திருவிழா செங்கமலதாயர் பெண்கள் கல்லூரி மன்னார்குடி: மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி யின் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி யின் தாளாளர் டாக்டர் திவாகரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் அமுதா முன்னிலை வகித்தார். கல்லூரி மாணவிகள் ஏற்பாடு செய்திருந்த சமத்துவ பொங்கல் விழாவை கல்லூரி தாளாளர் திவாகரன், முதல்வர் அமுதா ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து கல்லூரி மாணவிகள் பங்கேற்ற சிலம்பாட்டம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு துறை சார்பில் மாணவிகள் சமைத்த பொங்கலை சூரியனுக்கு படைக்கும் விதத்தில் தாளாளர் மற்றும் முதல்வர் கற்பூரம் ஏந்தி பூஜை செய்தனர். நிகழ்ச்சியில் துணை முதல்வர்கள் உமாமகேஸ்வரி, அனுராதா மற்றும் கல்லூரி பேரா சிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.
வரும் 10ம் தேதி அட்சயதிரிதியை கொண்டாட்டம் நகைக்கடைகளில் முன்பதிவு மும்முரம்: விலை குறைந்து வருவதால் நகை வாங்க பலர் ஆர்வம்
வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரிப்பு; சென்னைவாசிகள் வீடுகளுக்குள் முடங்கினர்: மாலையில் கடற்கரை, பூங்காக்களில் மக்கள் வெள்ளம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு
ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிப்பு; சென்னையில் வட மாநில தொழிலாளி உயிரிழப்பு: மேலும் ஒரு கட்டிட தொழிலாளிக்கு சிகிச்சை
வணிகர் தினத்தை முன்னிட்டு பெரும்பாலான கடைகள் சென்னையில் அடைப்பு: ஓட்டல்கள், மளிகைக்கடைகள் திறக்கப்படவில்லை
நீட் தேர்வுக்கு தயாரான மாணவியிடம் சென்னை போலீஸ்காரர் சில்மிஷம்: தட்டிக்கேட்ட பெற்றோர் மீது சரமாரி தாக்குதல்
ஜிஎஸ்டி, உணவு பாதுகாப்பு சட்டங்களில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும்: மதுரையில் நடந்த வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாநாட்டில் தீர்மானம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் வழக்கு பாஜ மாநில நிர்வாகி கோவர்தனிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு