தமிழகம் அரசு மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா Jan 14, 2020 சமத்துவம் பொங்கல் திருவிழா அரசு மருத்துவமனை அரசு மருத்துவமனை திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே வேளுர் தண்டலைச்சேரியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. முதல்வர் சக்திவேல் தலைமை வகித்தார்.. இதில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் விரிவுரையாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக விரிவுரையாளர் திலகர் வரவேற்றார். முடிவில் விரிவுரையாளர் தனிகைராஜன் நன்றி கூறினார். திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. தலைமை மருத்துவர் சிவகுமார் தலைமை வகித்தார். முன்னாள் தலைமை மருத்துவர் தனபால் விஜயா முன்னிலை வகித்தார். மருந்தாளுநர் மணிவண்ணன் வரவேற்றார். சமத்துபொங்கல் வைத்து அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.இதில் டாக்டர்கள் பாலாஜி, முகமது சுகைல், அரவிந்த்பிரசாத், அருள்குமார், சித்த மருத்துவர் அனுஷா, யோகாமருத்துவர் சுப்புலட்சுமி அலுவலக கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், தலைமை மருந்தாளுநர் கருணாநிதி, தலைமைச் செவிலியர் வாசுகி, மருந்தாளுநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி
சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டப வளாகத்தில் ரூ.1.40 கோடியில் கட்டிட பணிகள்: செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஆய்வு
கொடைக்கானலில் கட்டுக்குள் வந்தது காட்டுத்தீ மேல்மலை பகுதிக்கு செல்ல 10 நாட்களுக்கு பின் அனுமதி: சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி
நாகையில் இருந்து 13ம் தேதி போக்குவரத்து தொடக்கம் இலங்கைக்கு கப்பலில் பயணிக்க ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு: நிர்வாக இயக்குனர் அறிவிப்பு
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு: தோட்டத்தில் கரிக்கட்டையாக கிடந்த உடல், எஸ்பிக்கு கடிதம் மூலம் மரண வாக்குமூலம்