தமிழகம் கோடை சீசனுக்காக சிம்ஸ் பூங்காவில் 2.60 லட்சம் மலர் செடிகள் நடவு பணி Jan 14, 2020 மலர் தாவரங்கள் சிம்ஸ் பார்க் கோடை காலம் சிம்ஸ் பூங்காவில் குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி மே மாதம் நடைபெறுவதையொட்டி 2 லட்சத்து 60 ஆயிரம் மலர் செடிகள் நடவும் பணி துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் தோட்ட கலைத்துறை கட்டுப்பாட்டில் சிம்ஸ் பூங்கா உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பழக்கண்காட்சி நடந்து வருகிறது. இந்தாண்டு 61வது பழக்கண்காட்சி வரும் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக குன்னூர் சிம்ஸ் பூங்கா தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மலர்செடிகள் நடவும் பணி துவங்கியது. இவ்வாண்டு பழக்கண்காட்சிக்காக 2 லட்சத்து 60 ஆயிரம் மலர் நாற்றுகள் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சால்வியா, ஆன்ட்ரியம், பால்சம், பெகோனியா, மேரிகோல்டு, பிரன்ச் மேரிகோல்டு, பேன்சி பிளக்ஸ், ஹோலிஹாக், டெல்பினியம், ஜெரானியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், கேலன்டுலா, கேன்டிடப்ட், டயான்தஸ், கிளார்கியா, ஜின்னியா, ஸ்வீட் வில்லியம், செலோசியா, அமரான்தஸ், பிரிமுளா, கார்னேஷன், கிளியோம், சூரியகாந்தி, ஆஸ்டர் லுபின் மற்றும் டேலியா போன்ற 60க்கும் மேற்பட்ட செடி வகைகள் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு நடவு செய்யும் பணி துவங்கியுள்ளது. இதில் முதற்கட்டமாக டேலியா மற்றும் பிளாக்ஸ் செடிகள் தோட்டகலைத்துறை உதவி இயக்குநர் ராஜ் கோபு நடவு செய்து பணியை துவங்கி வைத்தார். குறிப்பாக மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு இயற்கை வேளாண் முறையில் பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மே7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட மக்களுக்கு இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மரு.ரா.வைத்தியநாதன்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மறைவிற்கு செல்வப்பெருந்தகை இரங்கல்
மீன்பிடி தடை காலம் அமல்; நாகை, தஞ்சை, புதுகை, காரைக்காலில் 120 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு: படகு, வலை சீரமைப்பு பணியில் மீனவர்கள் மும்முரம்
கொடைக்கானலில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்படாவிட்டால் உணவகங்கள், விடுதிகள் கோடை சீசன் முழுவதும் அடைக்கப்படும்: ஹோட்டல் சங்கத்தினர்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் வரும் 15ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்குகிறது.
5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு மே 10 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம்: அம்பேத்கர் சட்டப் பல்கலை அறிவிப்பு
வலுக்கும் எதிர்ப்பு!: இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும் என எச்சரிக்கை..!!
தமிழ்நாட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்; 7,8 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்