உழவர் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்களுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு மற்றும் உழவர் திருநாள் வள்ளுவப் பெருநாள் வாழ்த்துக்கள் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சாதி மத பேதமற்று நாம் அனைவரும் ஓரினம்- தமிழினம் என்ற உன்னத உணர்வை பெற வேண்டும் என அவர் குறிப்பிட்டார். ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் தளைக்க சமத்துவ பொங்கலை சமைப்போம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் மனித சமூகத்தை பிளவுபடுத்தும் சக்திகளை மறைய செய்வோம் எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இயற்கையோடு இயைந்த பொங்கலை போற்றுவோம், பொங்கலை கொண்டாடுவோம், புத்துணர்வு பெறுவோம் என கூறினார்.

Related Stories: