மாற்றுத்திறனாளிக்கு லாட்டரியில் ரூ.70 லட்சம் பரிசு

திருவனந்தபுரம்: கேரளாவின் கொல்லம் அருகே இலகமண் பாளையங்குன்னு பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (55). மாற்றுத்திறனாளி. லாட்டரி சீட்டு விற்று வந்தார். இவரது நண்பர் தேவராஜனும் லாட்டரி சீட்டு விற்று வருகிறார். நேற்று தேவராஜன் விற்று வந்த கேரள அரசின் பவுர்ணமி லாட்டரி சீட்டு ஒன்று விற்காமல் இருந்துள்ளது. அந்த சீட்டை பிரேம்குமாரிடம் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக வேறொரு லாட்டரி சீட்டை அவர் வாங்கிக் கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த குலுக்கலில் பிரேம்குமாரிடம் இருந்த லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசான ரூ.70 லட்சம் கிடைத்துள்ளது.

Related Stories: